அண்மையச்செய்திகள்
Wednesday, 11 January 2017
கோவையில் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:
******************************
நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மலம் கழிக்கும் போராட்டத்தின் எதிரொலியாக இன்று காலை மாநகராட்சி சார்பில் உடனடியாக தற்காலிக கழிப்பிடம் அமைக்க உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் நிரந்தர பொதுக்கழிப்பிடம் கட்டித்தர நிலம் தேர்வு செய்யப்பட்டு விரைவாக கட்டித்தரப்படும் என்றும் தண்ணீர்குழாய் இரண்டு நாட்களில் அமைத்து தரப்படும் என்றும் அதிகாரிகள் இன்று ஆய்வின் போது தெரிவித்தனர்.
******************************
நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மலம் கழிக்கும் போராட்டத்தின் எதிரொலியாக இன்று காலை மாநகராட்சி சார்பில் உடனடியாக தற்காலிக கழிப்பிடம் அமைக்க உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் நிரந்தர பொதுக்கழிப்பிடம் கட்டித்தர நிலம் தேர்வு செய்யப்பட்டு விரைவாக கட்டித்தரப்படும் என்றும் தண்ணீர்குழாய் இரண்டு நாட்களில் அமைத்து தரப்படும் என்றும் அதிகாரிகள் இன்று ஆய்வின் போது தெரிவித்தனர்.
Tuesday, 10 January 2017
தேனியில் போராளி சரவணன் நினைவு நாளில் "அரசியல் விழிப்புணவு கருத்தரங்கம்" சிறப்பாக நடைபெற்றது
10.1.17தேனியில் போராளி சரவணன் நினைவு நாளில்
"அரசியல் விழிப்புணவு கருத்தரங்கம்"
ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி
அய்யா அதியமான் அவர்களின் தலைமையில்
சிறப்பான முறையில் நடைபெற்றது முன்னதாக குறிஞ்சி நகர் பகுதியில் நீலச்செங்கொடியை அய்யா அதியமான் அவர்கள் ஏற்றி வைத்தார்
இக்கருதரங்கத்தில் ஏராளமான நீலச்சட்டை தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் குதியில் ஆதித்தமிழன் மாத இதழ், காலண்டர், மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரல் பகுதியில் ஆதித்தமிழன் மாத இதழ், காலண்டர், மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது. உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் கொளதமன் ,மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு , மாவட்ட இளைஞரணி தலைவர்
அன்பு செல்வன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய மாணவரணி செயலாளர் அருந்ததி முத்து ,மற்றும் பொருளாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்குட்டிMLA விடம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்தனர் பேரவையினர்
7-1--2017 அன்று கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்குட்டிMLA அவர்கள் கோவை மாநகராட்சி 2வது வார்டு அண்ணாகாலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பாக பகுதி முழுவதும் மேற்ப்பார்வையிட்டார். அவருடன் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் ரங்கநாதன், மற்றும் அல்போன்ஸ் அவர்கள் பகுதியில் மேலும் உள்ள அடிப்படை பிரச்சினைகளை MLA விடம் காண்பித்து விளக்கமளித்தனர். பகுதியிலுள்ள அடிப்படை வசதிகள் அணைத்தும் சரிசெய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.
பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி தராத கோவை மாநகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையினர் மலம் கழிக்கும் போராட்டம் .தற்போது நடத்தினர்.
பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி தராத கோவை
மாநகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையினர் மலம் கழிக்கும் போராட்டம் .தற்போது
நடத்தினர். 10.1.19
*******************************************************
உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்டித்தராத மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம்.
************************************8
கோவை மாநகராட்சி 72 வது வார்டு உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர ரூபாய் இரண்டு லட்சம் டென்டர் எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் கட்டித்தர நடவடிக்கை எடுக்காத மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தினை .இன்று நடத்தினர்.இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் மு.கார்க்கி தலைமையில் மலம் கழிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை மு.அறிவரசு. சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரதாப். சிலம்பரசன். நடராஜ். சதீஸ். தோழர்கள் அல்போன்ஸ் உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்
போராட்டத்தில் ஈடுபட்ட அணைத்து தோழர்களையும் கைது செய்து .நல்லாயன் சமூக கூடத்தில்.வைத்துள்ளது ..அங்கு மாநகராட்சிகள் கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நகர்வு குறித்து கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது ....
*******************
சிறைக்கூடத்தை பள்ளியறையாக்குவோம்
தலைமுறையை விடுதலையாக்குவோம்
***************************
என்றும் சமூக நீதி போராளி அய்யா அதியமான் அவர்கள் வழியில்
ஆதித்தமிழர் பேரவை கோவை
*******************************************************
உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்டித்தராத மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம்.
************************************8
கோவை மாநகராட்சி 72 வது வார்டு உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர ரூபாய் இரண்டு லட்சம் டென்டர் எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் கட்டித்தர நடவடிக்கை எடுக்காத மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தினை .இன்று நடத்தினர்.இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் மு.கார்க்கி தலைமையில் மலம் கழிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை மு.அறிவரசு. சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரதாப். சிலம்பரசன். நடராஜ். சதீஸ். தோழர்கள் அல்போன்ஸ் உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்
போராட்டத்தில் ஈடுபட்ட அணைத்து தோழர்களையும் கைது செய்து .நல்லாயன் சமூக கூடத்தில்.வைத்துள்ளது ..அங்கு மாநகராட்சிகள் கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நகர்வு குறித்து கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது ....
*******************
சிறைக்கூடத்தை பள்ளியறையாக்குவோம்
தலைமுறையை விடுதலையாக்குவோம்
***************************
என்றும் சமூக நீதி போராளி அய்யா அதியமான் அவர்கள் வழியில்
ஆதித்தமிழர் பேரவை கோவை
Subscribe to:
Posts (Atom)






























