அண்மையச்செய்திகள்

Wednesday, 10 May 2017

நெல்லையில் அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவை



நாளை மறுநாள் (13-5-17) நெல்லை மாநகரில் நடக்கும் #அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் பேரணி சம்பந்தமாக இன்று அய்யா சுப.#உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது...

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கு.கி கலைகண்ணன், குட்டிபாய் ,விஜய், மதன் ,அஜித், சுந்தர், தோழர்கள் கலந்து கொண்டனர்.



Monday, 8 May 2017

ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் விரட்டி அடிப்பு

ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் விரட்டி அடிப்பு
"""""'''"'''''""'"""""
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட போராளி மகேஸ்வரன் இல்லத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத்தை ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலைய செயலாளர் தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன், உள்ளிட்ட வாவிபாளையம் கிளை நிர்வாகிகளும், மகேஸ்வரன் கும்பத்தாரும், அருந்ததியர் பொதுமக்களும் திரண்டெழுந்து
இட ஒதுக்கீட்டின் எதிரியே!
இந்துமத வெறியனே!
அர்ஜுன் சம்பத்தே!
ஆணவக் கொலைகளை ஊதிப் பெரிதாக்கும் ஆதிக்க சாதிகளின் கைக்கூலியே!
போராளி வீட்டிற்கு வராதே!
புரட்சி மண்ணை கலங்கப் படுத்தாதே!
என.. முழக்கமிட்டு காவல்துறையை கதிகலங்க வைத்து கருப்புக் கொடியேந்தி பெரியாரின் பேரன்களாக அம்பேத்கரின் வாரிசுகளாக அதியமானின் தம்பிகளாக ஆர்த்தெழுந்து
அர்ஜுன் சம்பத்தை விரட்டி அடித்த போராளிகளுக்கு வாழ்த்துக்கள் பல..
ஆர்.எஸ்.எஸ் எந்த வடிவில் வந்தாலும் அதை அடித்து நொருக்கும் நீலப்படை! என மீண்டும் நிரூபித்துக் காட்டிய கொள்கை வாதிகளை பாராட்டுவோம்! போராளிகளை ஊக்கப்படுத்துவோம்!
நீலவேந்தன் தம்பிகளாக பகுதிப் பொறுப்பாளர்களை வார்த்தெடுத்த போராளி மகேஸ்வரனின் மண், வீரம் செறிந்த மண். என்பதை நிரூபித்த வாவிபாளையம் கிளை நிர்வாகிகள் மூர்த்தி, குமார், மணி, மோகன்ராசு, ஜீவா ஆகியோரே! அடுத்த தலைமுறையின் தளபதிகள்.
இவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பாதிக் கொம்பனாலும் பெரியார் மண்ணை பிரிக்க முடியாது.
---நாகராசன்.



நீட் தேர்வை தடை செய்யக்கோரி மே 5ல் தேனியில் தபால் நிலையத்தை ஆதித்தமிழர் பேரவையினர முற்றுகையிட்டனர்

மே 5 இல் உலக பொருளாதார தந்தை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் சமூக நீதிக்கு எதிரான தமிழகத்தில் கொண்டு வரும் நீட் தேர்வை தடை செய்ய கோரியும்
மத்திய அரசை கண்டித்து
தபால் நிலையம்
முற்றுகை போர் !
எழுது கோலை ஏந்துவோம் !
எளிய மக்களை உசுப்புவோம் !
தலைமை வே அருந்தமிழன்
முன்னிலை மு வீரவேந்தன் , வீரஆதவன்
ஆதித்தமிழர் பேரவை மாணவரணி
தேனி மாவட்டம்





அருந்ததியர் பழனிச்சாமி மர்ம மரணம் போராட்ட களத்தில் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை


""""""""""""""""""""""""""""”""""
கோவை சூலூர் அருகே மந்திரிபாளையத்தை சேர்ந்த அருந்தததியர் கூலித் தொழிலாளி பழனிச்சாமி கடந்த மே 1 அன்று வழக்கமாக வேலைக்கு சென்றவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், செய்தி அறிந்த குடும்பத்தாரும் உறவினர்களும் இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, இது கொலைதான் என்றும் இந்த கொலையை முன் விரோதம் கொண்ட ஆதிக்க வகுப்பை சேர்ந்த சிலர்தான் செய்திருக்க வேண்டும் உடலில் பல இடங்களில் காயாங்கள் இருக்கிறது என்று உறுதியாக சொன்னதன் அடிப்படையில் பேரவை மாவட்ட செயலாளர் உக்கடம்.முருகன் அவர்கள் களதிற்கு சென்று போராட்டத்தில் இறங்கினார், சம்பவத்திற்கு உரிய நீதி கிடக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோழர் வெண்மணி, தோழர் பன்னீர் ஆகியோருக்கு தகவல் கொடுத்து போராட்டத்தை வலுப்படுத்தினார். போராட்டத்தின் இறுதியில் பழனிச்சாமி மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று காவல் மற்றும் வருவாய் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அடுத்தகட்ட போராட்டம் என்பது காவல் அதிகார்களின் நடவடிக்கையை பொறுத்தே மாறுபடும்.
4.5.2017



வெற்றிச்செய்தி...!


மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி ஒன்றிய சாப்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை & சத்யா என்ற காதலர்களை பிரிக்கநினைத்ததன் தொடர்ச்சியாக 16-7-2014 அன்று அண்ணாமலையின் அண்ணன் கருப்பசாமியை சாதிவெறியுடன் கொலைசெய்யும் என்னத்தோடு அரிவாளால் வெட்டிய செல்வத்தேவர் என்ற குற்றவாளியை 17 ஆண்டு்கள் சிறையில் அடைத்த மதுரை மாவட்ட நீதிபதி திரு ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்த வழக்கில் என்னோடு உறுதியுடனும், அற்பனிப்புடன் உதவிய ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கும் நன்றி.


7.5.2017 திண்டுக்கல் மேற்கு மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் வேடச்சந்தூர் ஒன்றியங்களில் புதிய கிளைகள் திறப்பு நடைபெற்றது.

7.5.2017 திண்டுக்கல் மேற்கு மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் வேடச்சந்தூர் ஒன்றியங்களில் புதிய கிளைகள் திறப்பு நடைபெற்றது.
""""""""""""""""""""
பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுதலில் நேற்று 7.5.2017 திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குஜிலியம்பாறை மற்றும் வேடசந்தூர் ஒன்றியங்களில் புதிதாக 11 கிளைகள் திறக்கப்பட்டது. காலை 11.30 க்கு தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்வு தொடங்கியது, இந் நிகழ்வில் பொதுச்செயலாளர் நாகராசன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்பிரமணி, மாநில இளைஞரணி செயலாளர் திருச்செங்கோடு தமிழரசு ஆகியோர் பங்கேற்றோம். நிகழ்வு மாலை 6.00 மணிக்கு நிறைவுற்றது.

11 கிளைகளிலும் கொடியேற்றம், பெயர்பலகை திறப்பு நிகழ்வு மிகவும் நேர்த்தியாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது, நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் விடுதலை தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் சண்முகம் அவர்கள் முன்னிலை பொறுப்பேற்று அனைத்து கிளைகளையும் சிறப்பாக உருவாக்கி இருந்தார். நிகழ்வை அமைப்புச் செயலாளர் சத்திரபட்டி.முருகன் ஒருங்கிணைத்தார்.

வேடசந்தூர் ஒன்றியம் பொறுப்பாளர்கள்.
"''''"""'""""""""""""""""""""
செயலாளர் மணிவேல்,
தலைவர் பழனிச்சாமி,
நிதிச் செயலர் நாகராஜ்,
அமைப்பு செயலர் சக்திவேல்,
து.செயலர் ரவி,
து.தலைவர் விஜய்.

1.குடப்பம் காலனி கிளை,
******
பொறுப்பாளர்கள்.
ரவி, சரவணன், ஆறுமுகம், வீரமணி, சரத்குமார், சந்திரன்,

2.இந்திராகாலனி கிளை,
(ஆதித்தமிழன் நகர்)
*******
பொறுப்பாளர்கள்
விஜய், திருப்பதி, சூர்யா, சின்னமணி, சந்துரு,

3.அம்மாபட்டி கிளை
*******
பொறுப்பாளர்கள்
பழனிச்சாமி, முத்துராஜா, சரவணன், முருகன்,

4.வெல்லம்பட்டி கிளை
********
பொறுப்பாளர்கள்
ஆனந்தன், பிச்சை, அழகர்சாமி, செந்தில், நாகராஜ், கோபால்,

5.தங்கச்சியம்மாபட்டி கிளை
(அம்பேத்கர் நகர்)
*******
பொறுப்பாளர்கள்
சின்னச்சாமி, முருகன், சரவணன், முருகேசன், சுப்பாராஜ், ரவி, அஜித்.

குஜிலியம்பாறை ஒன்றியம்
பொறுப்பாளர்கள்
"""""""""""""""""""""""""""
செயலாளர், செல்வம்,
தலைவர், யோகராஜ்,
நிதிச் செயலர் நெருப்புத் தமிழன்,
அமைப்பு செயலர், சரத்
கொ.ப.செ, ஜெயராமன்,
து.செயலர், மோகனவேந்தன்,
து.தலைவர், ராமராஜ்.

6.பொம்மகவுண்டன் புதூர் கிளை
******
பொறுப்பாளர்கள்
செல்வம், ராமராஜ், கிருஸ்ணன், மாரியபன், ரங்கசாமி,

7.கருங்குளம் காலனி கிளை
*******
பொறுப்பாளர்கள்
காளிமுத்து, முனியாண்டி, ஜெயபால், சரவணன், முத்தன், பெருமாள், பாலன்.

8.உப்பிலியபட்டி கிளை
********
பொறுப்பாளர்கள்
பெருமாள், தேவராஜ், ராமராஜ், ராஜேந்திரன், ரேவதி, யுவராஜ், வடிவேல், வேலுச்சாமி.

9.தாத்கனூர் கிளை
*******
பொறுப்பாளர்கள்
பழனிச்சாமி, மாரிமுத்து, காளிமுத்து.

10.கூட்டக்காரன்பட்டி கிளை
*********
பொறுப்பாளர்கள்
சரத், கருப்புவேந்தன், சதீஷ், முருகேசன், மதுரைவீரன், குமரவேல், தங்கவேல், கார்த்திக், சிலம்பரசன்.

11.மொச்சக்காயனூர் கிளை
*********
பொறுப்பாளர்கள்
வாழகிரி, வீரப்பன், ராமசாமி, தங்கவேல்.

பங்கேற்ற வடமதுரை ஒன்றிய பொறுப்பாளர்கள்
""'""""""""""""""""""""""""
பொறுப்பாளர்கள்
செல்வம், தண்டப்பணி, முத்துவேல், நந்தகுமார், செல்வராஜ்.
________
தகவல் தொகுப்பு
பொதுச்செயலாளர்
8.5.2017






நெல்லை மாநகரில் மே 13!! ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்

நெல்லை மாநகரில் மே 13 ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்
* விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் #தொட்டியபட்டியில்_அருந்ததியர் மக்கள் மீது திட்டமிட்டு சாதிய தாக்குதல்களை கண்டித்தும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படாததை கண்டித்தும், சேதப்படுத்தப்பட்ட வீடுகளை சீரமைத்து தராமல் அலட்சிய படுத்தி வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் ....
* அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆறு விழுக்காடாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த போராளிகள் #பழநீலவேந்தன்_திருச்சி_இராணி_திருப்பூர்_மகேசுவரன் , ஆகியோர்களை சமூகநீதி போராளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் ..
* மாதந்தோறும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவதை போல் #துப்பரவு_பணியாளர்களுக்கும்_குறை_தீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தியும் ...
* தாமிரபரணி நதி நீரை பெப்சி , கோகோ கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை #நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தியும்
#மக்கள்_திரள்_ஆர்ப்பாட்டம்
கண்டன நிறைவுரை
#நீலச்சட்டை_போராளிகளின்_தளபதி
ஆ.நாகராசன் - பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை - கிழக்கு மாவட்டம்