அண்மையச்செய்திகள்

Thursday 30 April 2020

பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்திப்பு.

பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்திப்பு.
~~~~~~~
டி.கோணகாபாடி பஞ்சாயத்து தலைவர் அம்சவள்ளி அவர்களை நேரில் சந்தித்து 22-04-2020 அன்று நடந்த நிகழ்வை கேட்டறிந்து.

பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து அதிமுக நிர்வாகி மோகன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அழுத்தம்   கொடுக்கப்பட்டது .

களத்தில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்...









அய்யா அதியமான் அவர்கள் பேரவை தோழர்களின் குடும்ப உறுப்பினர்களோடு உரையாடல் !


இன்று காலை 11.30 மணியளவில் ஆதித்தமிழர் பேரவை தோழர்களிடமும், தோழர்களின் குடும்ப உறுப்பினர்களோடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய கொரானா நோய் தொற்று காலங்களில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் , கொரானா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மை தொழிலாளர்கள் நலன் மற்றும் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்தும் காணொளி கட்சி மூலம் ஆதித்தமிழர் பேரவை நிருவனர் அய்யா அதியமான் அவர்கள் தோழர்களுடன் கலந்துரையாடினார்.

தலைமைக்காக
கோவை ரவிக்குமார்
பொதுச்செயலாளர்





"நடிகை ஜோதிகா" அவர்கள் மீது திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வரும் "பிஜேபி" சங்பரிவார கும்பல்களை "ஆதித்தமிழர் பேரவை" வன்மையாக கண்டிக்கிறது

பிஜேபி மோடி அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே "நடிகை ஜோதிகா" அவர்கள் மீது திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வரும் "பிஜேபி" சங்பரிவார கும்பல்களை
"ஆதித்தமிழர் பேரவை" வன்மையாக கண்டிக்கிறது...- அய்யா அதியமான் அறிக்கை


நடிகை ஜோதிகாவின் அக்கறையும்,
பார்ப்பனிய சங்கிகளின் அவதூறுகளும்.
ஆபாசங்களையும் அவதூறுகளையும் பரப்பும் பார்ப்பனிய சங்கி கும்பல்களின் திருவாய்கள் கொரானாவை விட கொடியது
ஆபாசமானது.
ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற
"JSW Movie Award 2020" நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜோதிகா அவர்கள் தமிழக மக்களின் பொதுநலன் குறித்தும்,
அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளியின் நிலை குறித்து வருத்ததோடு தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் கல்வி சதவீதம் 90 % என அதிகரித்திருந்தாலும்
அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பும்,
அரசுப் பள்ளிகளின் தரமும் அதைப் பயன்படுத்தும் பொதுமக்களின் அலட்சியங்களாலும் மிகவும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்த
"திருமதி ஜோதிகா" அவர்கள் தங்களது
அகரம் பவுண்டேசன் மூலம் சுமார் 3000 க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற மாணவர்களையும்
500 க்கும் மேற்ப்பட்ட ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் "JSW" திரைப்பட நிகழ்வில்
"கோவில்களுக்கு வழங்கும் நிதியைப் போல் பள்ளி, மருத்துவமனைக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும்" என்று
சமூக அக்கறையோடு பேசி இருக்கிறார்
இந்த பேச்சை ஏற்க முடியாத பார்ப்பனிய அடிவருடிகள் இந்துக் கோவில்களை ஜோதிகா அவமதித்து விட்டதாக சொல்லி வழக்கம் போல அவதூறுகளை பரப்பி கொண்டும் திட்டமிட்டு திசை திருப்பும் வேலையையும் செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஊடகங்களை வைத்து மக்களை திசை திருப்பி விடுவதில் பார்ப்பணர்கள் கை தேர்ந்தவர்கள்
தலைநகர் தில்லியில் நடந்த தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட இசுலாமியர்கள் தான் திட்டமிட்டு கொரனாவை பரப்பினார்கள் என்று அவதூறுகளை பரப்பினார்கள்
ஜனநாயக சக்திகளின் தொடர் முயற்சியால் அவர்களின் அவதூறுகள் முறியடிக்கபட்டது
தற்போது ஜோதிகா மீது அவதூறுகளை தொடங்கி விட்டனர்
அவதூறு பரப்புவது திசை திருப்புவது சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்ல..
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை தமிழகம் மட்டுமல்லாது
இந்தியா முழுவதும் பலகோடி பொதுமக்கள் வேலை இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பட்டினியால் உயிர் இழக்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்
அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கூட போடுவதற்கு வக்கற்ற இந்த பிஜேபி ஆர் எஸ் எஸ் சங்பரிவார கும்பல் அதையெல்லாம் பற்றி பேசுவதை விட்டு விட்டு நாடு தற்போது இருக்கும் நிலையில் நாட்டு மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு ஜோதிகா கோயில்களுக்கு எதிராக பேசி விட்டார் என்று தினந்தோறும் சமூக வலைதளங்களில் கதறிக் கொண்டு இருப்பது காழ்ப்புணர்ச்சியால் அல்ல இது திட்டமிட்ட செயல் ஆகும்
மத்திய அரசின் மீதும்
நாட்டின் பிரதமர் மோடியின் மீதும் மக்களுக்கு பெரும் அதிருப்தி தற்போது ஏற்பட்டு இருக்கிறது இந்த ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை மத்திய அரசு செய்து தருவதில் தவறிவிட்டது
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 68,000 கோடி கடனை தள்ளுபடி செய்கின்ற இந்த அரசு
கொரனா தொற்று நோயை குணப்படுத்த போதுமான மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வில்லை
நாட்டுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் கவனம் செலுத்த வில்லை
மக்களின் உயிரை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வில்லை.
மத்திய அரசு மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தினந்தோறும் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்
மத்திய அரசின் மீது மக்களுக்கு இருக்கக்கூடிய வெறுப்புணர்வை திசை திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டு
பிஜேபி அரசு சங்பரிவாரக் கும்பல் தற்போது ஜோதிகா பேசிய கருத்தை பெரிதுபடுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி கொண்டு இருக்கிறார்கள்
நடிகை ஜோதிகா அவர்கள் கோவில்களுக்கு செலவு செய்யும் காணிக்கைகளை கல்விக்கூடங்களுக்கு மருத்துவமனைகளுக்கு செலவு செய்யுங்கள் என்று பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த கருத்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்தளத்தில் சொல்லியிருக்கிறார் கோவில்களுக்கு செலுத்தும் காணிக்கைகளை குழந்தைகளின் கல்விக்கு செலுத்துங்கள் அது பலன் தரும் என்று உரக்கச் சொல்லி இருக்கிறார்
புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தை ஜோதிகா அவர்கள் வழிமொழிந்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.
ஜோதிகாவை பற்றி பேசக்கூடிய சங்பரிவாரக் கும்பல்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி பேச முடியுமா பேசினால் எப்படிப்பட்ட விளைவுகள் உருவாகும் என்பதை சங்பரிவாரக் கும்பல்களுக்கு நன்றாக தெரியும் இருந்தும் நடிகை ஜோதிகா மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு அவதூறுகளை பரப்ப காரணம் அவர் கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுக்க சொல்கிறார் கல்வி மறுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு ஏறத்தாழ 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வியை கற்க உதவி செய்திருக்கிறார்.
நம்மைப் போன்ற ஏழை எளிய குழந்தைகள் கல்வி கற்பதே பார்ப்பணியத்திற்கு பிடிக்காத ஒன்றாகும்
ராஜாஜி எப்படி குலத்தொழில் திட்டத்தை கொண்டு வந்தாரோ அதே போலத்தான் நாம் அனைவரும் நம்முடைய குல தொழிலை மீண்டும் செய்ய வேண்டும் என்பதுதான் பிஜேபி சங்பரிவாரக் கும்பலின் திட்டம்.
"கல்வி கற்றால் காதினிலே ஈயத்தை காய்ச்சி ஊற்று"
என்கிற "மனு(அ)தர்ம" கூற்றிலே வந்தவர்களுக்கு தமிழக மக்களின் நலன் பற்றி எங்கே தெரியபோகிறது..
கல்வி மற்றும் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
நடிகை ஜோதிகா அவர்கள் பேசிய கருத்தை நாமும் வழு சேர்க்க வேண்டும்
இதுபோன்ற கருத்துக்களை மட்டும் தான் மக்கள் அங்கிகரிப்பார்கள் என்று பிஜேபி சங்பரிவாரங்களை உணர வைக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கை தொடர்ந்து அம்பலபடுத்துவோம்
நடிகை ஜோதிகாவின் சமூக அக்கறைக்கு உடனிருப்போம்.
பார்ப்பனிய சங்கிகளின் அவதூறுகளை முறியடிப்போம்.!!
இரா.அதியமான்.
நிறுவனர் / தலைவர்.
ஆதித்தமிழர் பேரவை.
30-4-2020

Wednesday 29 April 2020

மே 4 ம் தேதி தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் தமிழகம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் !

விழிப்பாய் இரு"
"நெருப்பாய் எழு"
தூய்மை தொழிலாளர் தோழர்களே!
(4/5/2020) வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பீர்.!
வெற்றி பெற செய்வீர்.!!
வணக்கம்.
தூய்மை தொழிலாளர் தோழர்களே.
கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராக மக்களை காக்கின்ற மாபெரும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம்.
கடந்த காலங்களில் "சுனாமி", "வார்தா", "ஒக்கி புயல்" போன்ற பேரிடர் காலங்களிலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மிகச் சிறப்பாகவே நாம் பணிபுரிந்து இருக்கின்றோம்.
குறிப்பாக "சுனாமி"யில் இறந்த மனித உடல்களை தொடுவதற்கு அஞ்சிய போது தூய்மை தொழிலாளர்கள் அஞ்சாமல் அந்த உடல்களை மனிதநேயத்தோடு நல்லடக்கம் செய்தோம்.
இந்த செயலை அகிலமே பாராட்டியது.
ஆனால் "கொரோனா" அவ்வாறு இல்லை ஏனென்று சொன்னால் இந்த நோய் மனிதர்கள் தொடுவது "இருமல்", எச்சிலின் மூலமாக பரவுகிறது.
தூய்மை தொழிலாளர்கள் ஆகிய நாம் வழக்கம் போல எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி செய்துவருவது மிகுந்த ஆபத்தானது.
சூரியன் அஸ்தமிக்காத நாடு என்ற மமதை கொண்டவர்களும்
உலக வல்லரசு என்று கொக்கரித்த நாடுகளும் இன்றைக்கு எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போய் இருப்பதை நாம் அறிவோம்.
உலகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், 25க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நோய்க்கு எதிராக இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
மக்களைக் காக்கின்ற அதே வேளையில் நம்மையும் நாம் பாதுகாக்க வேண்டும், இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய தூய்மை தொழிலாளர்களுக்கு "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்" வழிகாட்டுதலின் படி பாதுகாப்பான உடைகள் தரமான "முககவசம்", "கையுறைகள்" "காலணிகள்", "தலைகவசம்", உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும்.என்று பலமுறை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஒரு சில இடங்கள் தவிர்த்து, இன்றுவரை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, என்பது வேதனையிலும் வேதனை.
தமிழகத்தில் உள்ள தூய்மை தொழிலாளர்களில் 99 விழுக்காடு பட்டியல் இன மக்களே.
எனவே தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் மேற்கண்ட உபகரணங்கள் வழங்குவதில் தொழிலாளர்களை பாதுகாப்பதில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் தலைவருமான "மாண்புமிகு தளபதி" அவர்களின் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்றஅனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம், நிறைவேற்றியும் கூட , இந்த அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே.கொரானா வில் இருந்து நம் உயிரை காக்க.
1)"இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்" வழிகாட்டுதலின் படி, குரானா பெரும் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய "தூய்மை தொழிலாளர்களுக்கு" தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
2)அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும "பி.சி.ஆர்" என்று சொல்லப்படுகிற மருத்துவ பரிசோதனை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
கொரோனா ஒழிப்பிற்காக ஊரடங்கு துவங்கிய காலம் முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும வழங்காத தமிழக அரசை கண்டித்தும்.
பெரும் தொற்று ஒழிப்பில் பணியாற்றும் முன்னணி படை வீரர்களான தூய்மை தொழிலாளர்களை பாதுகாத்திட,
வருகின்ற 4-5-2020 அன்று தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையின் சார்பில் "ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்" நடைபெற உள்ளது.
இந்தப் பேரிடர் காலத்தில் வேலை நிறுத்தம் என்பது வருத்தத்திற்குரியது, தான் ஆனாலும் செயல்படாத இந்த அரசை செயல்பட வைக்க வேறு வழி இல்லை,
மேலும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு தருவார்கள் எனவே அச்சப்படத் தேவையில்லை.
எனவே தொழிலாளர் தோழர்களே இந்த வேலைநிறுத்தத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும், வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உங்களை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.!
"தூய்மை தொழிலாளர்களின் உயிரை காக்க உரிமை மீட்க"
"விழிப்பாய் இருப்போம்.!"
"நெருப்பாய் எழுவோம்.!!


தோழமையுடன்
இரா.அதியமான்.
ஆதித்தமிழர் பேரவை

ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் - அய்யா அதியமான் அறிக்கை

ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் - அய்யா அதியமான் அறிக்கை

தமிழக அரசின் கவனத்திற்கு.
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும்..

டி.கோணகாபாடி ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி சதீஷ்குமார் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மோகன் என்பவரை வன்மையாக கண்டிக்கின்றேன்.

சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டம், தாரமங்கலத்தை அடுத்த டி.கோணகாபாடி ஊராட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்,
ஊராட்சி மன்ற தலைவராக அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டி.கோணகாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட
இலங்கை அகதிகள் முகாமில் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 22.04.2020 அன்று தலைவர் அம்சவள்ளி மற்றும் அவருடைய கணவர் சதீஷ்குமார் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சென்றுள்ளனர்

அங்கு சென்ற அம்சவள்ளி அவர்களை அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் மோகன் மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வழிமறித்து, சாதியின் பெயரை சொல்லி இழிவாக பேசி,
பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி அவர்கள் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக நிர்வாகி மோகன் என்பவர் அடிக்கடி சாதியின் பெயரை சொல்லி இழிவுபடுத்தி வந்துள்ளார்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்சவள்ளி அவர்கள் அமரும்போதும் சாதியின் பெயரைச் சொல்லி (நான் அமர்ந்த இடத்தில் சக்கிலிச்சி அமர்வதா) என்று இழி சொற்களால் பேசி வந்திருப்பது தெரிய வருகிறது.

ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளியின் கணவர் சதீஷ்குமார் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி மோகன் மற்றும் ஒன்பது நபர்கள் மீது தாரமங்கலம் காவல்துறையினர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் பணி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக நிர்வாகி மோகன் தூண்டுதலின் பெயரில் தனபால் என்கின்ற அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரை வைத்து ஒரு பொய்யான புகார் கொடுத்து சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் மீதும் தாரமங்கலம் காவல்துறையினர் பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் எடுத்துக்கொடுக்கும் அருந்ததியர் பெண்ணிடம் மோகன் என்பவர் தாரமங்கலம் எஸ்.பி.ஐ வங்கியில் சாதியைப் பற்றி இழிவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து இருப்பது அங்கு இருக்கின்ற சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்திருக்கிறது.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஆளும் கட்சியின் பொறுப்பாளர் என்றும் முதல்வரின் உறவினர் என்றும் கூறிக்கொண்டு அதிமுக நிர்வாகி மோகன் என்பவர் தொடர்ச்சியாக அருந்ததியர் மக்கள் மீது நடத்துகின்ற வன்முறை மற்றும் கொலை மிரட்டல் செயல்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல், மோகன் என்பவருக்கு ஆதரவாக செயல்படுவதோடு பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி மற்றும் அவரது கணவர் சதீஸ்குமார் இருவரையும் சாதியை சொல்லி இழிவுபடித்தி பேசியதோடு, தரக்குறைவாக பேசி ஊராட்சிமன்ற தலைவரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய அதிமுக நிர்வாகி மோகன் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பதுடன்,

வீடியோ ஆதரத்துடன் புகார் கொடுத்த பின்னும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது சட்டத்தின் மீதும் நீதித்துறை மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கின்ற வகையில்
சேலம் மாவட்ட காவல்துறை நடந்துகொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

காவல்துறையினர் உடனடியாக மோகன் என்பரை கைது செய்ய வேண்டும்,
சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்,
ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி அவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது...

இரா.அதியமான்
நிறுவனர் தலைவர்
ஆதித்தமிழர் பேரவை.
நாள்.29.04.2020


Thursday 29 November 2018

மரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் அய்யா அதியமான் திமுக தலைவர் ஸ்டாலி அவர்கள் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினர்


இன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய விபி துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உடன் நிறுவனர் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய பா.ச.க அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் நிறுவனர் அதியமான் அறிக்கை


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய நீர்வளத்துறை மூலம், பாசிச பா.ச.க அரசு அனுமதி அளித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தை கர்நாடக அரசு திடீர் என குறைத்ததற்காக தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் பாதிப்பை கடப்பதற்குள¸; அடுத்த கணமே மத்திய அரசு இவ்வாறு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தந்திருப்பது¸ ஏற்கனவே கஜா புயலால் வாடும் தமிழக மக்களை மேலும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம்¸ கர்நாடகா¸ கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி¸ மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலத்தில் புதிய அணை கட்டுவதாக இருந்தால்¸ அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி கர்நாடக அரசு நம் தமிழக எல்லை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அசுர வேத்தில் செய்வதற்கான உள்நோக்கமாக¸ 400 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்து கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம் தாரை வார்க்கவே என கருதப்படுகிறது.
வெறுமனே கரப்சன் கலெக்சன் என செயல்படும் தமிழக அரசு மத்திய அரசுக்கு புறா விடு தூது போல கண்துடைப்புக்காக கடிதம் எழுதி காலம் கடத்துகிறது. ஆனால் கர்நாடக அரசோ தனது மாநில எம்.பிக்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அனுமதி பெற்றுள்ளது. நமது மாநில எம்.பிக்களை அழைத்து தமிழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் இந்தாண்டும் உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது சாதனைதான். அதேசமயம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதிலும் முதலிடமாக இருப்பது வேதனையே.
இறுதியாக¸ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடவேண்டிய தருணம் இது. மேலும் இது போன்ற இரு மாநில பிரச்சனைகளில் மத்திய அரசு மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இரு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். இத்திட்டத்தை அனுமதித்த மத்திய பா.ச.க அரசை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்திட்டத்தின் அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை .
கோவை, 28.11.2018