அண்மையச்செய்திகள்

Wednesday 22 June 2016

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலைஇலக்கிய மேடை 5அம்சத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்றஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலைஇலக்கிய மேடை 5அம்சத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று 21.06.16ல்தேனி ஸ்டேட் பேங்க் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில்
சமூக நலப்போராளி அய்யா .பழ.நெடுமாறன் அவர்கள் பங்கு பெற்றார் தேனிமாவட்ட ஆதித்தமிழர்பேரவை சார்பாக மாவட்ட செயளாலர் தோழர்.இரா.இளந்தமிழன் அவர்களும்,தூய்மை தொழிலாளர் பேரவையின் சார்பில் தோழர் மாநில துனை செயலாளர் நீலகனலன் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்
ஆர்ப்பாட்டத்தின். கோரிக்கைகள்
1.தமிழகத்தில் நூலகங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக வேண்டும்,நூலகத்துறை க்கு தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும்
2.தமிழின் தொன்மையையும் ,தனித்தன்மையும் உலகுக்கு உணரச்செய்யும் விதமாக மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாநில அரசு தீவரமாக தலையிடவேண்டும்
3.தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்ற புதிய விருதுகள் ,திட்டங்கள் அறிவித்திடவேண்டும் .
4.கடந்த முறை அறிவிக்கப்பட்ட மினி திரையரங்கு திட்டத்தை கிராமந்தோரும் செயல்படுத்த வேண்டும்
5.அஞ்சல் வழித்தமிழ்க் கல்வியை குறைந்த கட்டணத்தில் நாடு,உலகம் முழுமைக்கும் செயல்படுத்தவேண்டும்
என்ற தீர்மானம் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் விசிக ,மற்றும் ,தலித்மக்கள் சம்மேளனம் ,புதிய தமிழகம் ,தமிழர் தேசிய. கட்சி ,சிபிஎம் எல் ரெட்ஸ்டார் கட்சியின் தோழர்கள் திரளாக பங்கபெற்றனர்.





No comments:

Post a Comment