அண்மையச்செய்திகள்

Wednesday 27 July 2016

மனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடிவரும் பெஸவாடா வில்சனுக்கு ராமன் மகசசே விருது, ஆதித்தமிழர் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் பாராட்டு

மனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடிவரும் பெஸவாடா வில்சனுக்கு ராமன் மகசசே விருது,
ஆதித்தமிழர் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் பாராட்டு
""""""""""""""
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஸவாடா வில்சனுக்கு பிலிபைன்ஸ் நாட்டின் உயர்த்தி விருதான  ராமன் மகசசே விருது அந்நாட்டு  அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பெஸவாடா வில்சன், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்.‌ இதற்காக, சஃபாய் கர்மசாரி அந்தோலன் என்ற மனித உரிமை அமைப்பை உருவாக்கியுள்ள வில்சன், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பிறந்தவரான பெஸவாடா வில்சனின் தந்தையும் சகோதரரும் உறவினர்கள் பலரும் துப்புரவுத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள். இளமைக்காலத்தில் விடுதியில் தங்கிப்படித்தபோது, பெஸவாடா வில்சனின் சாதியைக் குறிப்பிட்டு மனிதக்கழிவை அகற்றுபவர் என சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பெஸவாடா வில்சனிடம் கேட்காமலேயே, அவரது விருப்பமான வேலை துப்புரவுத்தொழில் என அதிகாரிகள் எழுதியதாகவும் கூறப்படுகிறது. சாதி அடிப்படையில், தான் அடிமைப்படுத்தப்படுவதைக் கண்ட வில்சன், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் சமூக அவலத்தை இந்தியாவிலிருந்து அகற்ற 1986ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார். அவரது இந்த சமூகநலப் பணிக்காக தற்போது, ராமன் மகசசே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது
தோழர் பெஸவாடா வில்சன் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.




No comments:

Post a Comment