அண்மையச்செய்திகள்

Monday 29 February 2016

‎ரிக் வண்டி மரணங்கள்‬

#‎ரிக்_வண்டி_மரணங்கள்‬
‪#‎நாமக்கல்‬ மாவட்டம் இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ‪#‎கல்குட்டு‬ கிராமம் ‪#‎அருந்ததியர்‬ பகுதியில்
‪#‎ஆந்திராவில்‬ உள்ள ‪#‎அசோக்ரெட்டி‬ போர்வெல் கம்பெனிக்கு புரோக்கர் முலம் முன்பணம் 10,000 ரூபாய் பெற்றுக் கொண்டு மனோஜ் (20)பாண்டியன், சக்திவேல், உட்பட நான்கு பேரும் அசோகா போர்வெல் கம்பெனிக்கு ஆந்திர மாநிலம் ‪#‎கடப்பா‬ பகுதிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சென்றவர்கள்..
கடந்த ஓராண்டில் எந்தவித விடுமுறையும் இல்லாமல் கொத்தடிமையாக வைத்து உள்ளார்கள்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் கல்குட்டு #அருந்ததியர் பகுதியில் உள்ள மனோஜ் அவர்களின் பாட்டி ‪#‎இறப்பிற்க்கும்‬ ஈமச்சடங்கு செய்வதற்கு கூட போர்வெல் நிர்வாகம் விடுமுறையில் செல்ல அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையில் ‪#‎பாண்டியன்‬ தன் தாத்தாவிற்க்கு ஆந்திராவில் சரியான உணவு,தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றோம் எங்களை மீட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.. அதன் அடிப்படையில் பாண்டியன் தாத்தா அவர்கள் ‪#‎நாமகிரிப்பேட்டை‬ ‪#‎காவல்நிலையத்தில்‬ புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை..
10/2/2016 அன்று ஆந்திரா அசோக போர்வெல் அலுவலகத்தில் இருந்து மனோஜ் அவர்களின் பெற்றோர்க்கு உங்கள் மகனுக்கு உடல்நிலை சரியில்லை ஆந்திராவில் இருந்து ராசிபுரத்தில் வந்து கொண்டு இருக்கிறார் என்று தகவல் சொல்லியுள்ளார்கள்..அதன் அடிப்படையில் மனோஜை அழைத்து வர 10/2/2016 அன்று இரவு பெரியப்பா மகன் சென்று உள்ளார்..
பெரியப்பா மகன் அவர்கள் மனோஜை பார்க்கும் போது மனோஜிற்க்கு அப்பா அம்மா யார் என்று தெரியாமல் போகும் அளவிற்கு ‪#‎சுய_நினைவு‬ இல்லாமல் கண்கள் வீங்கியும் கை கால்கள் வீங்கியும் பேருந்தில் வந்துள்ளார்.
மனோஜ் அவர்களை ‪#‎இராசிபுரம்‬ மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை அளித்து உள்ளார்கள்..13/2/2016 அன்று மேல் சிகிச்சைக்கு ‪#‎சேலம்_அரசு_மருத்துவமனைக்கு‬ சேர்த்து உள்ளார்கள்.. மூன்று நாள் 17/2/2016 காலையில் மனோஜ் அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார்..
சேலம் மருத்துவமனையில் மனோஜ் உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் சீக்கிரம் எடுத்து செல்லுங்கள் என்று அவசரநிலையில் உடலை மருத்துவமனையில் இருந்து அனுப்பியுள்ளார்கள்..
பேரவை தோழர்கள் அசோகா போர்வெல் கம்பெனிக்கு தொடர்பு கொண்டு கேட்க்கும்போது இவர்களின் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது.இவர்கள் தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு மற்றவர்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள்..
மனோஜ் சாவிற்க்கு காரணமான அசோகா போர்வெல் அதிபரை கைது செய்யவேண்டும்.. கம்பெனியில் கொத்தடிமையாக இருப்பவர்களை மீட்க வேண்டும்..
என ‪#‎ஆதித்தமிழர்_பேரவை‬ சார்பில் மனோஜ் உடலை புதைக்கமால் போராட்டம் நடைபெற்று வருகிறது
கல்குட்டு பகுதி முழுவதும் ‪#‎காவல்துறை‬ குவிக்கப்பட்டு அசோகா போர்வெல் அதிபரை கைது செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துகிறது






No comments:

Post a Comment