அண்மையச்செய்திகள்

Tuesday 23 August 2016

செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்கமாட்டோம் மானத்தோடு வாழ்வதற்கு அய்ந்து ஏக்கர் நிலம் வழங்கு! என மாமன்னர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நிறுவனர் அதியமான் எழுச்சியுரை.

செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்கமாட்டோம்
மானத்தோடு வாழ்வதற்கு அய்ந்து ஏக்கர் நிலம் வழங்கு! என மாமன்னர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நிறுவனர் அதியமான் எழுச்சியுரை.
""""""""""""""""""""
அய்யா அவர்களின் உரையை காண சொடுக்கவும்
ஆகத்து.20 காலை 11.30 மணியளவில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பேரவை தோழர்களுடம் சுமார் 50.க்கும் மேற்பட்ட வாகன அணிவகுப்பில் சென்று ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்க உறையாற்றினார்.
அதில் மத்திய மோடி அரசின் புதிய குலக்கல்வி கொள்கைக்கு எதிராகவும், சமக்கிருத திணிப்பை எதிர்த்தும், பசுப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்படும் இந்து பாசிச அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு வேடிக்கை பார்ப்பது அவமானத்துக்குறியது என்று மத்திய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்வதோடு
முதல் இந்திய விடுதலை வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை போற்றுவதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது, மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது. அது மட்டுமல்லாது தோழர்கள் வந்த வாகனங்களை வழிமறித்து பரிசோதனை என்ற பெயரில் பல்வேறு வாகனங்களை திருப்பி அனுப்பி தனது வீரத்தைக் காட்டியுள்ளது காவல்துறை இந்த சம்பவங்களை நினைத்து ஆளும் அரசுதான் வெட்க்கப்பட வேண்டும், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1 சதம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது அந்த ஒரு சதம் வாக்குகள் அருந்ததியர்கள் அளித்தது, அதை மாற்றி அமைத்தால் அதிமுக ஆட்சி நிலைக்காது என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசிற்கு தெரியபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், இதை எல்லாம் சாதிக்க அறிவுப்பூர்வமாக பகுத்தறிவோடு இளைஞர்கள் முன்வர வேண்டும் , அதைவிடுத்து பால் அபிசேகம் செய்வ முளப்பாரி எடுப்பது, செருப்பை கையில் எடுத்து செல்வது, போன்ற செயல்கள் மாவீரனை கடவுள் ஆக்கும் பார்ப்பனிய செயல் எனவே நெல்லையில் அமைந்துள்ள மணிமண்டபத்தினுள் வைக்கப்படுள்ள குதிரையுடன் கூடிய மாமன்னர் ஒண்டிவீரன் சிலையை மண்டபத்துக்கு வெளியே வைக்க தொடர் போராட்டங்கள் எடுக்க வேண்டும், மணிமண்டபத்திற்குள்ளும் சிலை கைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசினார், உடன் பொதுச்செயலாளர் உட்பட பேரவை நிவாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
_________________
செய்தி தொகுப்பின் சுருக்கம்
பொதுச்செயலாளர்.
நாகராசன்.
20.8.2016.
















No comments:

Post a Comment