அண்மையச்செய்திகள்

Tuesday 10 January 2017

பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி தராத கோவை மாநகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையினர் மலம் கழிக்கும் போராட்டம் .தற்போது நடத்தினர்.

பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி தராத கோவை மாநகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையினர் மலம் கழிக்கும் போராட்டம் .தற்போது நடத்தினர். 10.1.19
*******************************************************
உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்டித்தராத மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம்.
************************************8
கோவை மாநகராட்சி 72 வது வார்டு உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர ரூபாய் இரண்டு லட்சம் டென்டர் எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் கட்டித்தர நடவடிக்கை எடுக்காத மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தினை .இன்று நடத்தினர்.இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் மு.கார்க்கி தலைமையில் மலம் கழிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை மு.அறிவரசு. சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரதாப். சிலம்பரசன். நடராஜ். சதீஸ். தோழர்கள் அல்போன்ஸ் உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்
போராட்டத்தில் ஈடுபட்ட அணைத்து தோழர்களையும் கைது செய்து .நல்லாயன் சமூக கூடத்தில்.வைத்துள்ளது ..அங்கு மாநகராட்சிகள் கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நகர்வு குறித்து கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது ....
*******************
சிறைக்கூடத்தை பள்ளியறையாக்குவோம்
தலைமுறையை விடுதலையாக்குவோம்
***************************
என்றும் சமூக நீதி போராளி அய்யா அதியமான் அவர்கள் வழியில்
ஆதித்தமிழர் பேரவை கோவை






No comments:

Post a Comment