அண்மையச்செய்திகள்

Thursday 24 November 2016

தாழ்த்தப்ட்ட மக்களின் வீடுகளில் தீ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் #ஆதித்தமிழர் பேரவையினர் திடீர் குடியேறும் போராட்டம் --- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு


தேனி அல்லிநகரம் 12வடு வார்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீ விபத்தில் எரிந்து அதில் உன்ன உணவு உணவின்றி உடுத்த உடையின்றி தங்க இடமின்றி நிரந்தரமாக வீட்டுமனை பட்டா நிவாரணமாக வழங்கிட வலியறுத்தி மாவட்ட ஆட்சியை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது இதில் திரளான  நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளும் ஆதித்தமிழர் பேரவையினரும் திரளாக கலந்து கொண்டனர் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பதற்ற சூழ்நிலை நிலவியது மற்றும் செய்தியாளர்களும் குவிய தொடங்கினர்.
குடியேறும் போராட்டத்திற்கு தலைமைதாங்கிய மாவட்ட செயலாளர் தோழர் இரா இளந்தமிழன் அவர்கள்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தேனி அல்லிநகரம் 12 வது வார்டில் அருந்ததிய மக்கள் நீண்டநாள் குடியிருந்து வருகின்றனர் இங்கு இருக்கும் வீடுகளில் 22.11.2016 அன்று மாலை பொழுதில் திடீரென்று தி பற்றி எரிந்தது இதனால் அங்கு 5 வீடுகளும் ஒரு கடையும்  மேல் தீ பற்றி எரிந்து  முற்றிலும் சாம்பலானது இந்த சம்பவத்தால் அந்த வீடுகளில் வைத்திருந்த அரசு ஆவணங்கள் குழந்தைகளில் கல்வி சான்றிதழ்கள் பிறப்பு சான்றிதழ்கள்,ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் என முழுவதும் எரிந்து சாம்பலாகி போனது..தற்போது அந்த மக்கள் பொருளையும் ,பணத்தையும் இழந்து உன்ன உணவின்றி உடுத்த உடையின்றி தங்க இடமின்றி உள்ளனர் .
இதனை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் இலவச வீட்டு மனை பட்டாக்களும் உடனே வழங்க வேண்டும் ஆதித்தமிழர் பேரவை இம்மொளோடு இணைந்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினார்
குடியேறும் போராட்டத்திற்கு
தலைமை
இரா இளந்தமிழன் - மாவட்ட செயலாளர்
முன்னிலை தீப்பொறி அரசு - மாவட்ட தலைவர்
நீலக்கனலன் - மாநில தொழிலாளர் பேரவை துணைச்செயலாளர்
பழ விடுதலைவேந்தன் - மாவட்ட துணைச்செயலாளர்
கோட்டுர் ஜெயவேல் - தேனி ஒன்றியச்செயலாளர்
ஆ. நாகராஜன் - தேனீ நகரச்செயலாளர்

காணொளியை காண இங்கு சொடுக்கவும்










No comments:

Post a Comment