அண்மையச்செய்திகள்

Sunday 27 November 2016

*சோசலிச புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ விற்கு நீலச்சட்டை போராளிகள் வீரவணக்கம்*


26.11.2016
தாராபுரத்தில் நடைபெற்ற வீரமங்கை ராணி நினைவு நாள் நிகழ்வில் கியூபா வின் முன்னாள் அதிபர் பிடல்காஸ்ட்ரோ அவர்களின்  மறைவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிடல் காஸ்ட்ரோ வின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும், மக்கள் மீது அவருக்கு இருந்த மாறாத பற்றையும், அவர் எடுத்துக்கொண்ட போராட்ட யுக்திகளையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

பிடல்காஸ்ட்ரோ மறைவிற்கு நூற்றுக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் எழுந்து நின்று நிறுவனர் முன்னிலையில் அமைதிகாத்து இரண்டு நிமிடம் *வீரவணக்கம் செலுத்தப்பட்டது.*
______________________
*ஆதித்தமிழர் பேரவை*
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment