உடுமலைப்பேட்டையில் இன்று 17-9-2016 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
ஆதித் தமிழர் பேரவை சார்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டச்செயலாளர் க.தங்கவேல்
தலைமையில் நடந்தது. உடுமலை அருகில் உள்ள பாலப்பட்டி பெரியார் நினைவு
சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது...
இந்நிகழ்வில் மதவெறிக்கு எதிராகவும் நவீன குலக்கல்விக்கு எதிராகவும் சாதிஆணவக் கொலைகளை தடுத்திடவும் சூழுரை ஏற்கப்பட்டது...
திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை நகர பொருப்பாளர் தோழர் இயல் ,மடத்துக்குளம் தோழர் மோகன் தலித்முரசு இதழ் சார்பாக தோழர் அருட்செல்வன் தோழர் கொழுமம் ஆதி, நான் (மா.ஈழவேந்தன்)உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதே போல உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆதித் தமிழர் பேரவை சார்பாக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் மதவெறிக்கு எதிராகவும் நவீன குலக்கல்விக்கு எதிராகவும் சாதிஆணவக் கொலைகளை தடுத்திடவும் சூழுரை ஏற்கப்பட்டது...
திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை நகர பொருப்பாளர் தோழர் இயல் ,மடத்துக்குளம் தோழர் மோகன் தலித்முரசு இதழ் சார்பாக தோழர் அருட்செல்வன் தோழர் கொழுமம் ஆதி, நான் (மா.ஈழவேந்தன்)உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதே போல உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆதித் தமிழர் பேரவை சார்பாக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment