அண்மையச்செய்திகள்

Thursday 29 September 2016

விடுதலை போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலிக்கு முழு உருவச்சிலை அமைத்து அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

விடுதலை போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலிக்கு முழு உருவச்சிலை அமைத்து அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

சுதந்திர போராட்டத்தில் எதிர்த்து போரிட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலுக்கு அவரது நினைவிடத்தில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டம் .மானாமதுரையில் நடந்தது.மாவட்ட செயலாளர் பாலு தலைமை வகித்தார் இம்மானுவேல் பேரவை மாவட்ட சங்கர் அம்பேத்கார் முன்னிலை வகித்தார்.
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வெள்ளையர்களின் ஆயுத கிடங்கில் தற்கொலை தாக்குதல் நடத்தி வீரமரணம் அடைந்த தியாகி வீரத்தாய் குயிலியின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்,அவரது நினைவிடத்தில் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும்,சிவகங்கை மாவட்ட நகராட்சி பேருராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்,மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாத அருந்ததியர் குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்க நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காளிதாசன்,மாவட்ட துணை தலைவர் முருகேசன்,மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன்,மானாமதுரை நகர துணை செயலாளர் மனோஜ் குமார்,தமிழ்முரசு,பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,நகர செயலாளர் ஒண்டிவீரகுமார் நன்றி கூறினார்.
 







No comments:

Post a Comment