அண்மையச்செய்திகள்

Saturday 17 September 2016

கரூர் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இன்று 17.9.16 அன்று புரட்சியாளர தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அய்யா பெரியார் சிலை இருக்கும் இடத்திற்கு நீலச்சட்டை பட்டாளத்தோடு ஊர்வலமாக சென்று புரட்சி கோஷங்கள் எழுப்பி அய்யா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர்
"மதவெறி சாதிவெறியை மாய்த்திடுவோம்!
மனித நேயத்தை மக்கள் நெஞ்சில் வளத்திடுவோம்"
அய்யா பெரியார் பணி முடித்திடுவோம்
சூளுரை ஏற்றுக்கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக அய்யா பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment