அண்மையச்செய்திகள்

Tuesday 16 October 2018

அடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..! சிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.!!

அடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..!
சிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.!!
""""""""""""""""""""""""""""""""""""
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கிழப்பழுவூர் அருகே உள்ள கருப்பில கட்டளை ஊராட்சியில் மூப்பனார், படையாச்சியார், யாதவர், பறையர் என பல சமூகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாக அருந்ததியர் மக்கள் அடிப்படை வசதியற்ற புறக்கணிக்கபட்ட பெருஞ்சேரியாகவே இருந்து வருகின்றது.
ஏறத்தாழ 650 அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 5 பேர் மட்டுமே அரசுப் பணிகளிகளில் இருந்து வருகின்றனர். இந்த 5 பேரும் அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் அமர்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியைச் சேர்ந்த ராஜா வின் மனைவி கவிதா(34) த/பெ அப்பாதுரை என்பவர் அரியலூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் இளநிலை அலுவலராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கண்பார்வைகுறைபாடு காரணமாக அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண் நரம்பில் நீர் கட்டி உள்ளது, இதை அகற்றுவதற்கு திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்கள்.
அதனடிப்படையில் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனையில் கடந்த 4-10-2018 அன்று சேர்ந்துள்ளார்.
இவரை பரிசோதனை செய்த டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர் என்பர் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட கவிதா 8-10-2018 அன்று உடல் முழு தகுதியுடன் அறுவை சிக்சைக்கு மாலை 7.30 க்கு சென்றுள்ளார்.
பின்னர் 10.30 Pm தீவிர அவசர பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களது குடும்பத்தினர் யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை அவ்வப் போது பணத்தை மட்டும் கட்டச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இப்படி 11 ந்தேதி வரை சுமார் 3 இலட்சம் வரை கட்டியுள்ளனர்.
அக்டோபர் 12 ந் தேதி இரவு ரோந்து மருத்துவர்கள் செயற்க்கை சுவாசத்தில் இருப்பதாக மருத்துவர்கள்அருணா ரமணி, அரவிந்த் ஆகியோர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் ICU சென்று பார்த்த தந்தை அப்பா துரை மற்றும் உறவினர்கள் கண் தொடர்பாக எந்த அறுவை சிகிச்சை செய்யாமல் உடலில் பல்வேறு பாகங்களில் கட்டுகள் போடப்பட்டு சுயநினைவின்றி செயற்க்கை சுவாசத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.
பின்பு 14-10-2018 அன்று மாலை 6.30 மணியளவில் திருச்சி மலைக் கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மூலம்
கவிதாவின் தந்தை அப்பாதுரை வீடான காட்டு பிரிங்கியத்தில் வந்து நேரில் கூறிச் சென்றுள்ளார்.
இறந்ததில் மர்மம் இருப்பதை அறிந்த
பின்னர் நமது ஆதித்தமிழர் பேரவைத் தோழர்களுடன் தொடர்பு கொண்ட கருப்பில கட்டளை அருந்ததியர் சண்முக சுந்தரம் திருச்சி தோழர் செங்கை குயிலி மற்றும் தோழமை இயக்கத் தோழர்களோடும் கவிதாவின் உறவினர்களோடு திருச்சி - கரூர் சாலையில் 15-10-2018 அன்று சாலை மறியலில் ஈடுபட்டு சட்ட வழிகாட்டுதலோடு அப்பாதுரை மற்றும் உறவினர்களோடும் தோழமை இயக்கத்தினரோடு சட்டப் படி நியூரோ ஓன் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்தவுடன் ஆட்சியர் பரிந்துரையின் பேரில் திருச்சி காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் உடல் கூறாய்வை ஒளிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் உடல் ஒப்படைக்ப்பட்டது.
உடலை அடக்கம் செய்வதற்கு கருப்பில கட்டளைக்கு கொண்டுவரப்பட்டனர்.
மறுநாளான
16-10-2018 மறைந்த கவிதாவிற்கு வீரவணக்கம் செலுத்த ஆதித்தமிழர் மகளீர் பேரவையின் மாநில செயலாளர் தோழர் செங்கை குயிலி, ஆதித்தமிழர் பொறியாளர் பேரவை மாநில செயலாளர் தோ ர் எழில் புத்தன், ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநிலச் செயலா ளர் பெரு.தலித்ராசா.மற்றும் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரலேகா ஆகியோர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்கள்.
தகவலுக்காக :
பெரு.தலித்ராசா.
ஆதித்தமிழர் பேரவை.
16-10-2018

No comments:

Post a Comment