அண்மையச்செய்திகள்

Monday 29 October 2018

சேலம் மாநகர செயற்குழு நடைபெற்றது

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராளி வீரமங்கை ராணி வீரவணக்க நாளில் சேலம் சங்ககிரியில் நடக்கவிருக்கும் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூக நீதி மாவட்ட மாநாட்டை எழுச்சியாக நடத்துவது தொடர்பாக இன்று நடைபெற்ற சேலம் மாநகர செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது..
சேலம் மாநகர செயலாளர் தோழர் உதயபிரகாஷ் அவர்களின் தலைமையில்
மாநகர தலைவர் தோழர் பிரபு அவர்களின் முன்னிலையில் செயற்குழு நடத்தப்பட்டது
மாநகர செயற்குழுவை மாணவரணி செயலாளர் தோழர் துரை.மாதேஸ் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார்
முன்னாள் இராணுவ வீரரும் மாநில இளைஞரணி துணை செயலாளர் தோழர் வீரசிவா அவர்களும் மாநில மாணவரணி இணைச் செயலாளர் தோழர் டாக்டர்.மு.சிலம்பரசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..



No comments:

Post a Comment