அண்மையச்செய்திகள்

Monday 29 October 2018

திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது
வணக்கம், இன்று (28.10.2018) தாராபுரம் பயணியர் விடுதியில் ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்க்குட்பட்ட தாராபுரம் ஒன்றியம், நகரம் ,ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கலந்து கொண்டவர்கள்: பொன், செல்வம் (மாவட்ட செயலாளர்) பெ, முத்துசாமி(மாவட்ட தலைவர்) மு, சரவணன் (மாவட்ட து தலைவர்) தி. முருகேசன். (மாவட்ட நிதி செயலாளர்) ப, ராசேந்திரன் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்) சா. வசந்தா (மாவட்ட து தலைவர்) கு. வடிவேல் (மாவட்ட அமைப்பு செயலாளர்) ஆ. ஒண்டி வீரன் (மாவட்ட து தலைவர்) பழ ,செயராசு (தாராபுரம் நகர செயலாளர்) ஆ, சிவக்குமார் (மூலனூர் ஒன்றிய செயலாளர்) மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள்: (1) எதிர் வரும் நவம்பர் 17 அன்று செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்த திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பாக பத்து வாகனத்தில் கலந்து கொள்வது. (2) அணைத்து ஒன்றிய, நகரங்களில் பெயர்பலகை, கொடி கம்பம் அமைப்பது (3) மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட தாராபுரம் தனி தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் இயற்றபட்டன. தோழமையுடன், பொன். செல்வம் மாவட்ட செயலாளர். (திருப்பூர் (தெ) மாவட்டம்



No comments:

Post a Comment