ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் நெல்லை மாயா மீது போடப்பட்ட பொய்வழக்கு சம்பந்தமாக அவரை கைது செய்ததை கண்டித்து இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை தோழர்கள்,சில நாட்கள் முன்பு தன்னூத்து கிராமத்தில் வசிக்கும் அருந்ததிய மக்களுக்குக்கு அடிப்படை வசதிகள் செய்துஸ்ரீதரக்கோரி தோழர் நெல்லை மாயா தலைமையில் பாடைகட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதற்க பழிவாங்கும் விதமாக அரசு அவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளது என கூறி மேல்சட்டை போடாமல் வாயில் துணிகட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் பரபரப்பான ஆட்சியர் அலுவகத்தில் பேரவையினரோடு போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.வழக்கை திரும்ப்பெற்று கைது செய்யப்பட்ட பேரவை நிர்வாகியை விடுதலை செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் ஓன எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment