அண்மையச்செய்திகள்

Tuesday 17 October 2017

ஆதித்தமிழர் பேரவை தேனிமாவட்ட சிறப்பு ஆலோசனைக்கூட்டம் இன்று 16-10-17 காலை நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை தேனிமாவட்ட சிறப்பு ஆலோசனைக்கூட்டம் இன்று 16-10-17 காலை நடைபெற்றது
********
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1- மத்திய மோடி அரசின் பார்ப்பனிய பயங்கரவாத அடக்கு முறைகளுக்கு எதிராக தீபாவளியை புறக்கணிப்பு செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2- ஆட்சியை காப்பாற்ற கவனம் செலுத்தாமல் மக்கள் மீது அக்கறை கொண்டு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள முன்வரவேண்டும்

3- சாதிவெறி , மதவெறி, ஆதிக்க தலித் வெறி , அடிப்படை மதவெறி ,ஆணவப்படுகொலைகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் , கருத்துரிமை பறிப்பு , கல்வி உரிமை சிதைவு , மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தை வேரறுக்க ஈரோட்டில் நடைபெறும் தீபாவளி புறக்கணிப்பு கருதரங்கத்திற்கு திரளாக தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும்
4- டெங்குவை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது
தலைமை - இரா இளந்தமிழன் (மாவட்டச்செயலாளர் )
முன்னிலை
தீப்பொறி அரசு - மாவட்டத்தலைவர்
விடுதலைவேந்தன் - மாவட்ட துணைச்செயலாளர்
தமிழவன் - மாவட்ட மாணவரணிச்செயலாளர்
நீ சிவா - மாவட்ட செய்தி தொடர்பாளர்
சிறப்புரை
நீலக்கனலன்
நன்றியுரை
வே அருந்தமிழன் - நகர மாணவரணிச்செயலாளர்

No comments:

Post a Comment