அண்மையச்செய்திகள்

Tuesday 17 October 2017

தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம் அனைவரையும் அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை

தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது , அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது,இதற்க்கு ஆதரவு கொடுத்து ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளே !! ஒன்றிணைவீர் !! ஒத்துழைப்பு தாரீர்
************************
சாதிவெறி , மதவெறி, ஆதிக்க தலித் வெறி , அடிப்படை மதவெறி ,ஆணவப்படுகொலைகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் , கருத்துரிமை பறிப்பு , கல்வி உரிமை சிதைவு , மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தை வேரறுக்க ,பெரியார் மண்ணில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
#தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம்
நாள் 18-10-17 புதன் மாலை 4 மணி
இடம் மாநகராட்சி மண்டபம்
ஈரோடு பேருந்து நிலையம் அருகில்
தலைமை
இரா அதியமான் - நிறுவனர் ஆதித்தமிழர் பேரவை
முன்னிலை
இரா வீரகோபால் - மாவட்டச்செயலாளர் (ஈரோடு தெற்கு )
மா ஆறுமுகம் - மாவட்டச்செயலாளர் (ஈரோடு வடக்கு )
பழ வீரகுமார் - மாவட்டச்செயலாளர் (ஈரோடு மாநகரம் )
வரவேற்புரை
ச சு ஆனந்தன் - தலைமை நிலையச்செயலாளர்
துவக்கவுரை
ஆ நாகராசன் - பொதுச்செயலாளர்
கருத்துரை
தோழர் கொளத்தூர் மணி - தலைவர் , திராவிடர் விடுதலை கழகம்
தோழர் பாலபாரதி - முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி )
தோழர் வெண்மணி - தலைவர் ,ஆதித்தமிழர் கட்சி
தோழர் பெருமாவளவன் - நிதிச்செயலாளர் , ஆதித்தமிழர் பேரவை
தோழர் சண்முகம் - மாநில அமைப்புச்செயலாளர் - திராவிடர் கழகம்
தோழர் குமரகுருபரன் - மாவட்டச்செயலாளர் ,தந்தை பெரியார் திராவிடர் கழகம்
நன்றியுரை - சி இராதா மாநகர மாவட்ட நிதிச்செயலாளர்
சாதிவெறி , மதவெறி, ஆதிக்க தலித் வெறி , அடிப்படை மதவெறி ,ஆணவப்படுகொலைகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் , கருத்துரிமை பறிப்பு , கல்வி உரிமை சிதைவு , மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று,
ஒரே நாடு, ஒரே மொழி, இற்றை கலாச்சாரம் என்ற ஆர் எஸ் எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தி,வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு சட்ட மரபுகளை சிதைக்கும் ,மக்கள் விரோத பா ச க மோடி அரசின் நயவஞ்சக செயலை அம்பலப்படுத்தி ,மக்களுக்கு விழிப்பூட்ட ஒருங்கிணைப்பதே இக்கருத்தரங்கம்.
அண்மையில் கருத்துரிமைக்கு எதிராக கர்நாடகாவில் ஆர் எஸ் எஸ் குண்டர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ், நீட் தேர்வில் படுகொலைக்கு உள்ளான அனிதா , இந்து முன்னணி கயவர்களால் சிதைக்கப்பட்ட அரியலூர் சிறுமி நந்தினி , உயர்கல்வி மறுப்பால் படுகொலையான ஜெ என் யு தலித் மாணவர் சேலம் முத்துகிருஷ்ணன், அடிப்படை மதவெறியால் படுகொலையான கோவை பாருக், சாத்திய ஆணவ திமிரினால் படுகொலைகளுக்கு உள்ளன உடுமலை சங்கர் ,திண்டுக்கல் சிவகுருநாதன் , பெரம்பலூர் பார்த்தீபன் , திட்டக்குடி சிவகுமார் என நீளும் கோரா படுகொலைகளை கண்டித்து அம்பலப்படுத்துவதோடு இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களுக்கு எதிராக கோபம் கொண்டு கொதித்தெழ வேண்டிய மக்களை பண்டிகைகள், விழாக்கள் ,சடங்குகள்,சம்பிரதாயங்கள் என திசை திருப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ப்பனிய பண்பாட்டு ஏற்பாடு தான் இந்த தீபாவளி பண்டிகை.
இதை புரிந்து கொண்டு தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது , அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது,இதற்க்கு ஆதரவு கொடுத்து ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளே !! ஒன்றிணைவீர் !! ஒத்துழைப்பு தாரீர்






No comments:

Post a Comment