அண்மையச்செய்திகள்

Wednesday 11 October 2017

தீபாவளியை புறக்கணித்து *தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம்* பரப்புரை நடத்த ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழுவில் முடிவு!

தீபாவளியை புறக்கணித்து *தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம்* பரப்புரை நடத்த ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழுவில் முடிவு!
"""""""""""""""""""""""""""""""""""""'""""'
மதவெறி, சாதிவெறி, ஆணவப் படுகொலை, கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என பார்பனிய பயங்கர வாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் சட்ட மரபுகளை சிதைக்கும் மக்கள் விரோத பா.ச.க வின் மத்திய மோடி அரசின் நயவஞ்சக செயலை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்ட தீபாவளியை புறக்கணித்து பரப்புரை கருத்தரங்கம் நடத்த ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழுவில் முடிவு செய்துள்ளது.
அண்மையில் கருத்துரிமைக்கு எதிராக கர்நாடகாவில் கெளரி லங்கேஸ், நீட் தேர்வினால் குழுமூர் அனிதா, இந்து முன்னணி கயவர்களால், அரியலூர் சிறுமி நந்தினி, உயர்கல்வி உரிமை மறுப்பினால் சேலம் முத்துக்கிருட்டிணன், அடிப்படை மதவாதத்தால் ஃபாருக், சாதி ஆணவத் திமிரினால், உடுமலை சங்கர், திண்டுக்கல் சிவகுருநாதன், பெரம்பலூர் பார்த்திபன் என நீளும் படுகொலை சம்பவங்களால் நாடு மிகப்பெரிய அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசோ மத்திய அரசின் அடிமை அரசாகவே செயல்பட்டு வருகிறது.
இதே போன்று டெங்கு என்ற காய்ச்சலால் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்த்தையும் தாண்டியுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர், இதற்கான மருத்துவக் கவனத்தை முழு வேகத்தில் செலுத்த வேண்டிய தமிழக அரசின் சுகாதாரத்துறை இறந்தோரின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதற்கே முனைப்புக் காட்டுகிறது..
இப்படிப்பட்ட கொடுஞ் செயல்களுக்கு எதிராக கோபம் கொண்டு கொதித்தெழ வேண்டிய மக்களை இயல்பாக கடத்து போக செய்கின்ற பார்பனிய ஏற்பாடுதான் தீபாவளி, இதைப் புரிந்து கொண்டு தீபாவளி என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த, துணிவு தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதைப் பின்பற்றி இன்று ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக அண்மையில் நடந்தேரிய கொடுமைகளுக்கு காரணமான மத்திய பா.ச.க வை அம்பலப் படுத்தி தீபாளியை புறக்கணித்து, துக்கநாள் என்று அறிவித்து தீபாவளிக்கு முன்னதாக பரரப்புரையும், தீபாவளி அன்று துக்கநாள் கருத்தரங்கத்தையும், ஆதித்தமிழர் பேரவை முன்னெடுக்கிறது. இதனால் முழு வெற்றி கிடைக்கும் என்று நம்புவதை விட இதை அப்பலப்படுத்தி முன்கை எடுக்கின்றோம், எங்களது முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றினைய வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை அறைகூவல் விடுக்கிறது.
தீபாவளி என்பது நரகாசூரன் என்ற ஆதித்தமிழனை அடித்துக் கொன்ற நாள்! இந் நாள் நமக்கு துக்கநாள்! என்பதை உணர்ந்து ஒரு சிலர் அணிதிரண்டாலே அதுதான் நமக்கான வெற்றி.. அந்த வெற்றியை நோக்கி பயணிப்போம்! ஆரிய பார்பனிய பண்பாட்டுத் திணிப்பை எதிர்த்திடுவோம்!
______________________
ஆதித்தமிழர் பேரவை
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.
9.10.2014\

No comments:

Post a Comment