நெல்லை - பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சுமார் 40 குழந்தைகளை காற்று வசதி கழிப்பிட வசதி என்று எந்த வசதியும் இல்லாத வேறு வார்டுக்கு மாற்றியுள்ளது மருத்துவமனை நிர்வாகம் அந்த வார்டில் குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அனைவரும் வார்டை விட்டு வெளியேறியதால் சிகிச்சை பெற முடியாமல் பத்து மணி நேரம் அவதிப்பட்டுள்ளனர் மதியம் பதினோறு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை குளிர்ந்த காற்றில் பிள்ளைகளோடு வாசலில் இருந்துள்ளனர்
நோயாளிகளுக்கு அறை வசதி செய்து கொடுக்காத நிர்வாகம் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த அறையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளனர்
மனசாட்சி இல்லாத மருத்துவர்கள்
நோயாளிகளுக்கு முன் ஏற்பாடு செய்யாமல் அவர்களை வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் இரவு பத்து மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் வசதியான வார்டுக்கு நோயாளிகள் மாற்றி அதன்பின்
சிகிச்சை அளித்தனர்..
ஊடக பத்திரிக்கையாளர்களின் முயற்சியால் அவர்களது கோரிக்கை நிறைவேறியது
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தேன்
கு.கி.கலைகண்ணன்
No comments:
Post a Comment