அண்மையச்செய்திகள்

Sunday 12 November 2017

தாராபுரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தாராபுரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

12.11.2017 தாராபுரத்திற்கு உட்பட்ட பேரவை அலுவலகத்தில் செயற்குழு கூடடம் நடைபெற்றது.
கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப. அர்ச்சுணன் .
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட நிதிச் செயலாளர்
பொன். செல்வம் , மாவட்ட துணைக் செயலாளர்
P. S மணி,
மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் ஆட்டோ முருகேசன், தாராபுரம் நகரத் தலைவர் பழனிச்சாமி, தாராபுரம் நகரச் செயலாளர் சிவக்குமார், தாராபுரம் ஒன்றியத் தலைவர் சரவணன், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் மகுடிச்வரன் ,
தாராபுரம் ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் இராசேந்திரன், தாராபுரம் ஒன்றிய மாணவரணிச் செயலாளர், அ. சிவக்குமார் , மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்கள்

கூட்டத்தின் நோக்கம்
தீர்மானம் 1:
புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டது

தீர்மானம் 2:
தாராபுரம் நகரத்தில் திசம்பர் 3ஆம் தேதி 5இடங்களில் கொடி ஏற்று விழா நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3:
மாநாட்டின் களப்பணியில் ஒன்றியப் பகுதிகளில் தோழர்களை சந்தித்து மாநாட்டின் கொள்கைகளை மக்களிடம் கூறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் 4:
நவம்பர் 17 செகடன்தாளி முருகேசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு திருப்பூர் தெற்கு மாவட்டத்திலிருந்து 5வாகனங்கள் வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 5:
நவம்பர் 26 திருச்சி ராணி அக்கா நிகழ்வுக்கு திருப்பூர் தெற்கு மாவட்டத் தோழர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப. அர்ச்சுணன்
ஆதித் தமிழர் பேரவை




No comments:

Post a Comment