அண்மையச்செய்திகள்

Sunday 26 November 2017

கத்திப்பட பாணியில் நடந்த கோரப் படுகொலை

கத்திப்பட பாணியில்*
*நடந்த கோரப் படுகொலை*
""""""""""""""""""""""""""""""""""""
மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில், வெவ்வேறு இடங்களில் கோரமாக வெட்டிப் படுகொலை!

கிடைக்கப் பெற்றிருக்கும் முதல் தகவல்:-
""""""""""""""""""""""""'
திண்டுக்கல்லில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு, பலிதீர்க்க திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பாலமுருகன் (45), வீரா (35), சரவணன் (30) ஆகிய மூவரும் பட்டப்பகலில் படுகொலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.

இது கத்திப் படத்தில் வரும் காட்சி போல 17 பேர் கொண்ட கூலிப்படை ஒரே நேரத்தில், ஒரே வடிவத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலையாக நடந்துள்ளது.
இந்த கூலிப் படையில் நாயக்கர், வன்னியர், பெரும்பான்மையாக பறையர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

முன்விரோதத்தில் படுகொலையான சோமு என்ற சோமசுந்தரம் (வன்னியர்) கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை, படுகொலையான மூவரில் வீராவும், சரவணனும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்!

படுகொலைக்கு உள்ளானவர்கள், முன் விரோதக் கொலையில் தொடர்பு உள்ளவர்களா இல்லையா? என்பது போகப் போக விசாரணையில் தெரிய வரும்.

எது எப்படியோ! கூலிப்படைகள் எல்லாம் அம்மையார் பொறுப்புக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள் என்று வீரவசனம் பேசிய அதிமுக அரசில்தான் கூலிப்படை கொலை கோரமாக நடந்துள்ளது.

தடுத்து நிறுத்துமா? இல்லை தனக்கு சாதகமாக கூலிப்படைகளை பயன்படுத்துமா! ஆளும் அரசுகளுக்கே வெளிச்சம்!

ஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் களத்தில் உள்ளார்

*குறிப்பு*
""""'""""""""""
இதில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் முன் பின் மாறலாம்.. இது மேலோட்டமாக கிடைக்கப் பெற்ற தகவல்தான்!
_______________________
-நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.



No comments:

Post a Comment