அண்மையச்செய்திகள்

Sunday 19 November 2017

தூய்மைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.இழிவொழிப்புப் போராளி அய்யா அதியமான்

தூய்மைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.இழிவொழிப்புப் போராளி அய்யா அதியமான்
""""""""""'"""""""""""""''''"'"'""''''""""""""
16-11-2017 அன்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த நமது பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்கள் அலங்கா நல்லூர் ஒன்றியம் காந்திகிராமத்தில், அலங்கை பேரூராட்சி, கல்லனை ஊராட்சி, அழகாபுரி ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து வருகை தந்த தூய்மைப் பணியாளர்கள் இழிவொழிப்பு போராளி நமது நமது நிறுவனர் தலைவர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் நமது தலைவர் அய்யா அதியமான் அவர்களும் மிகுந்த அக்கரையுடன் கேட்டறிந்தார்.
உடன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்
தோழர் து.ஜானகியம்மாள்.மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் கபீர் நகர் கார்த்திக்.மாவட்டச் செயலாளர் தோழர் பா.ஆதவன்.மாவட்டத் தலைவர் தோழர் அலங்கை பாரதிதாசன்.மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் இரா.அன்புச் செழியன்.மாநகர் மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் இரா.கௌரி.அலங்கா நல்லூர் ஒன்றிய செயலாளர் தோழர் சரவணன்.மேற்கு ஒன்றிய செயலாளர் தோழர் அதியவன். அலங்கை பேரூர் நகர செயலாளர் தோழர் சிங்கப் பாண்டி மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர, கிளை உறுப்பினர் ஆகியோர்கள் இருந்தனர்.
--------------------------------------
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை - ஆதித்தமிழர் பேரவை.





No comments:

Post a Comment