அண்மையச்செய்திகள்

Tuesday 26 September 2017

நெருப்புதமிழன் நீலவேந்தன் நினைவேந்தல் நிகழ்வுகள் " செப்டம்பர் 26 "

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை காக்கவும் உயர்த்தி தர கோரியும் தீக்குளித்து உயிர் நீத்த நெருப்புத்தமிழன் #நீலவேந்தன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் அறிவாசான் அய்யா #அதியமான் அவர்கள் தலைமையில் திருப்பூரில் நீலவேந்தன் நினைவிடத்தில் நீலச்சட்டை பட்டாளத்தோடு வீரவணக்கம் செலுத்தினார் பின்பு மாலை திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
தமிழக தன்னாட்சி உரிமை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அய்யா அதியமான் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நீலச்சட்டை தோழர்கள் சிறப்பான எழுச்சி மிகு வரவேற்பளித்தனர் தொடர்ந்து #டாக்டர் இலக்கியா அவர்கள் அய்யாவிற்கு தனது குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்தினார் , தொடர்ந்து அய்யா அதியமான் அவர்கள் உரிமை விளக்கவுரை ஆற்றினார் இந்நிகழ்வில் நீலச்சட்டை இராணுவமும் மக்களும் மிகப்பெரிய எழுச்சியுடன் கலந்து கொண்டு தலைமுறையை விடுதலை தலைமுறையாக உருவாக்கியே தீருவோம் என முழக்கமிட்டும் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று சபதமேற்றனர்

























No comments:

Post a Comment