அண்மையச்செய்திகள்

Thursday 21 September 2017

மாணவர் மரணம் - மறியல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என அய்ந்து நாட்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது

மாணவர் மரணம் - மறியல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என நாட்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது
"""""""""""""""""""""""'''"""""'"""""
நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வந்த விக்னேஸ்வரன், உடல் இன்று ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர் குழுவின் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
வன்கொடுமை சட்டப்படி வரவேண்டிய தீர்வைத் தொகையை சம்மந்தப்பட்ட மாணவனின் தாயார் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொலையாளி ஆசிரியர் குப்புசாமி பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
ஆகவே அய்ந்து நாட்களாக நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் சமரசமில்லா போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை உணவை மறுத்து உறக்கத்தை இழந்து போராட்டக்களத்தில் நின்ற அய்யா அதியமான் அவர்களின் உணர்வுள்ள நீலப்படைப் போராளிகள் அனைவருக்கும் தலைமக்குழு தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வ்ததோடு,
கொலை சம்பவத்தை நாடறிய செய்து மாணவன் குடும்பத்தாருக்கு உரிய நீதியை பெற்றுத்தர ஒத்துழைப்பு நல்கிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
_______________
களத்தில் இருந்து
பொதுச்செயலாளர்.
21.9.2017

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு முன்பு பொதுச்செயலாளரின் செய்தளர்களுக்கு அளித்த பேட்டி







No comments:

Post a Comment