அண்மையச்செய்திகள்

Wednesday 13 September 2017

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் ,நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர்
__
13.9.17 இன்று காலை 10.30 மணிக்கு திருப்பூர் திமுக சார்பில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை கண்டித்து.... மத்திய மாநில அரசுகளே...நீட் தேர்வை ரத்து செய்...கல்வியை மாநில பட்டியலில் சேர்த்திடு... என கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் ஆதித்தமிழர்பேரவையின் வடக்கு மாவட்ட தலைவர் சோழன் தலைமையில் பேரவை தோழர்கள் அரங்கபரமேசுவரன் வடக்கு மாவட்ட நிதி செயலாளர்,துறை அரசன் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர்,மாநகர தலைவர் தளபதி குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment